May 16, 2008

இரவே நீயொரு கருத்தம்மா

நட்சத்திரத்தை
நகையாக அணிந்து
நிலவெடுத்து
பொட்டு வைத்து
நடு இரவில்
சுமங்கலியாகி
காரிருளை
சேலையாக உடுத்தி
காரிகைபோல்
வந்த இரவே நீ
என்னதான் சீவி
சிங்காரித்தாலும்
வெண்ணிலவும்
வெளிச்சம் போட்டாலும்
வெள்ளையாக்க
உன்னை முயற்சித்தாலும்
இரவே நீ என்றும்
கருத்தம்மா தானடியோ

No comments:

Post a Comment