May 7, 2008

தோழி

கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........

என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...

உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.

என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.

சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர் இந்த நட்பு.

என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம் உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்

No comments:

Post a Comment