Apr 25, 2009

கல்லூரிக் காதல்....

ரோஜாப்பூ சுடிதார் அணிந்து செல்ல
எங்காவது பார்த்ததுண்டா ?

கூவிச்செல்லும் மைனாக்கள் கூட்டமாய்
கொஞ்சுதமிழ் பேசக் கேட்டதுண்டா ?

மேகக்கூட்டம் தாவனியோடு
திரியக் கண்டதுண்டா ?

தொட்டாச்சினுங்கிகள் பார்வை பட்டே
மலர்ந்ததாய் யாரும் சொன்னதுண்டா ?

பட்டாம்பூச்சிகள் சிறகடிக்காமல் நடந்து
செல்லும் அழகை ரசித்ததுண்டா ?

தேவதைகள் விண்ணிலிருதுதானே பூமிக்கு வரும்
பேருந்திலிருந்து இறங்கி வந்ததுண்டா ?

சுட்டெரிக்கும் வெயிலில் பக்கத்தில் நிலவுடன்
பேசி மகிழ்ந்ததுண்டா ?

அவ்வப்போது கனவுகளாய் வந்துசெல்லும்
என் கல்லூரிக்கால நினைவுகள் !
 

No comments:

Post a Comment